Tuesday, September 27, 2016

நான்


வஞ்சனையில் ஓடும்
நிந்தனையில் வாடும்
இந்த மனமே எனது உடைமை

பொருளாக மாறாத அன்பை விளங்காது
பொருளிலே அன்பைத் துருவித் தேயும்

இத்தனி மனித பிதற்றலுக்கு
அளவு கிடையாது

பேராசையில் ஓடும்
வீண் சுகத்தில் வாடும்
இப்பிறவி சாகும் வரை
ஓர் மரணதண்டனை

இயற்கை விதி...

மழையின் சிலிர்ப்பும் மழலைச் சிரிப்பும் 
இசையின் கவர்வும் வெறும் புலன்களின் பலன்

கவியின் சொல்லும் சொல்லின் பொருளும் 
வீணாய் அற்ப  அறிவைத் தீண்டும் 

அனுபவமாய் 
இவை அனைத்தும் உள்ளே நிகழ்த்தும் 
உள்ளுணர்வே மெய்யென்றால்

அம்மெய் 
தன்னை வெளிப்படுத்தும் தருனத்தில் 
பொய்யாவது ஏனோ...