எனக்குப் பட்ட அறிவைப் பகிர இந்த வலைப்பூ.... கொஞ்சம் பெனாத்தலும் இருக்கும். சொற்குற்றம், பொருட்குற்றம் காணும் நக்கீரர்களே, உங்கள் கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Tuesday, September 27, 2016
நான்
வஞ்சனையில் ஓடும்
நிந்தனையில் வாடும்
இந்த மனமே எனது உடைமை
பொருளாக மாறாத அன்பை விளங்காது
பொருளிலே அன்பைத் துருவித் தேயும்
இத்தனி மனித பிதற்றலுக்கு
அளவு கிடையாது
பேராசையில் ஓடும்
வீண் சுகத்தில் வாடும்
இப்பிறவி சாகும் வரை
ஓர் மரணதண்டனை
இயற்கை விதி...
மழையின் சிலிர்ப்பும் மழலைச் சிரிப்பும்
இசையின் கவர்வும் வெறும் புலன்களின் பலன்
கவியின் சொல்லும் சொல்லின் பொருளும்
வீணாய் அற்ப அறிவைத் தீண்டும்
அனுபவமாய்
இவை அனைத்தும் உள்ளே நிகழ்த்தும்
உள்ளுணர்வே மெய்யென்றால்
அம்மெய்
தன்னை வெளிப்படுத்தும் தருனத்தில்
பொய்யாவது ஏனோ...
Subscribe to:
Posts (Atom)