Tuesday, September 27, 2016

நான்


வஞ்சனையில் ஓடும்
நிந்தனையில் வாடும்
இந்த மனமே எனது உடைமை

பொருளாக மாறாத அன்பை விளங்காது
பொருளிலே அன்பைத் துருவித் தேயும்

இத்தனி மனித பிதற்றலுக்கு
அளவு கிடையாது

பேராசையில் ஓடும்
வீண் சுகத்தில் வாடும்
இப்பிறவி சாகும் வரை
ஓர் மரணதண்டனை

No comments:

Post a Comment