Tuesday, September 27, 2016

இயற்கை விதி...

மழையின் சிலிர்ப்பும் மழலைச் சிரிப்பும் 
இசையின் கவர்வும் வெறும் புலன்களின் பலன்

கவியின் சொல்லும் சொல்லின் பொருளும் 
வீணாய் அற்ப  அறிவைத் தீண்டும் 

அனுபவமாய் 
இவை அனைத்தும் உள்ளே நிகழ்த்தும் 
உள்ளுணர்வே மெய்யென்றால்

அம்மெய் 
தன்னை வெளிப்படுத்தும் தருனத்தில் 
பொய்யாவது ஏனோ...

No comments:

Post a Comment