Tuesday, September 27, 2016

நான்


வஞ்சனையில் ஓடும்
நிந்தனையில் வாடும்
இந்த மனமே எனது உடைமை

பொருளாக மாறாத அன்பை விளங்காது
பொருளிலே அன்பைத் துருவித் தேயும்

இத்தனி மனித பிதற்றலுக்கு
அளவு கிடையாது

பேராசையில் ஓடும்
வீண் சுகத்தில் வாடும்
இப்பிறவி சாகும் வரை
ஓர் மரணதண்டனை

இயற்கை விதி...

மழையின் சிலிர்ப்பும் மழலைச் சிரிப்பும் 
இசையின் கவர்வும் வெறும் புலன்களின் பலன்

கவியின் சொல்லும் சொல்லின் பொருளும் 
வீணாய் அற்ப  அறிவைத் தீண்டும் 

அனுபவமாய் 
இவை அனைத்தும் உள்ளே நிகழ்த்தும் 
உள்ளுணர்வே மெய்யென்றால்

அம்மெய் 
தன்னை வெளிப்படுத்தும் தருனத்தில் 
பொய்யாவது ஏனோ...

Friday, June 17, 2016

பழத்தின் பலன்

சில பழங்கள் சில பழுதுகளுக்கு
பல பழங்கள் சாப்பிடுவார்கள்
அப்பழுதுகள் சில பழங்களிலே
பலனடையும்

Friday, February 12, 2016

நீர்

அமைதியாய் புவியாடும் 
மெய்யோடும் உயிராடும் 

தாகம் தணியும் தருவாயில் 
சொர்கம் உணர்த்தும் 
நன்றி இல்லா மனிதனுக்கு 
நன்றி உணர்த்தும் 

அமைதியாய் புவியாடும்
மெய்யோடும் உயிராடும்

தாகம் தணியும் தருவாயில்
சொர்கம் உணர்த்தும்
நன்றி இல்லா மனிதனுக்கு
நன்றி உணர்த்தும்

அம்மண மனிதரை குழிப்பாட்டும்
வெளிப்புறத்தை துப்பரவும்
உட்புறத்தை உசுப்பேத்தும்

அடக்கமாய் விளையாடும் மேற்பரப்பு
உள்ளே சீண்டப்பட்டால்
பேரிடர் விளைக்கும் பெண்ணான படைப்பு

உன்மேல் மிதிப்பதை கவனிக்கும் மனம்
உன்னைக் கவனித்தால்
வெறுமைச் சுழலில் துலையுமோ
விழிக்கும் போதையில் துயிலுமோ

அமைதியாய் புவியாடும்
என் மெய்யோடும் உயிராடும்
உன்னிடத்தில் பல பாடங்கள் படிக்க வேண்டும்
உன் சிற்றலைப் பரப்பில் மெய்யுணர வேண்டும்



Sunday, February 7, 2016

காதல் வயம்


கதறக் கதறக் காதாலிக்கும் என் ஆண்மனம்
காம வயப்பட்டு உன் அருகே பன்றியைப் போல் கனைக்கும்

சீனாதானா இடுப்பழகை பார்க்கும்போதெல்லாம்
அவ்ளோதானா என நீ எண்ணாமல் என் கட்டை திரளும்

சிணுங்கிச் சிணுங்கி சிரிக்கும் உன் இதழ்கள்
என் சில்மிஷங்களை ஏற்றுக்கொண்டால்
வேட்கமுறுவது ஆணாகும் நானல்லோ

மனதில் காதல் வைத்தாலும்
கண்களுக்குத் தொட்டுணரத் தெரிவதோ
உறுப்புக் கொண்ட உன் மேனி

மனிதர் உணர்ந்துகொள்ள மனிதர் காதல் அல்ல
என் காதல் மனித உள்ளம் கொண்ட குரங்குக் காதல்

ஒருவரை ஒருவர் மேய்தாக்க இயலா இக்காதலை
நிஜமென்று எண்ணிக்கொள்

நானும் நீயும்
பல கவிஞர் வரைந்த பொய்யிலே
மெய்யாய் மிதப்போம்

Wednesday, February 3, 2016

இசை

இசை
வார்த்தை விளக்கிப் பொருள் குறுக்கிடலால்
சொல்லும் அல்ல பொருளும் அல்ல
உணர்வுகளை உணர்வுகளால் உணர்ந்தே

புற சூழலை புணர்ந்தே உணர்ந்தேன்
உயிரும் இசையும் உள்ளே உணர்ந்தேன்

வெளித்தோற்றம் கண்களில் ஈரம்
பிறர் நோக்கு மதிப்பீட்டில் பித்தன்


காடு


மனிதன் அழித்த காட்டை
மனிதனே காக்க முயல்கிறான்
தன்னலம் அதில் இருப்பதால்

இந்தக் காட்டுக்கென்று குறிக்கோள் உள்ளதா
அதட்கென்று ஒர் அறிவு உள்ளதா
உணர்வில்லா இருப்பு
கருத்தற்ற காட்சி
அதன் மதிப்பறியா மனிதன்
பிழைக்கப் புசிக்கும் விலங்கு

விதி வைத்து வளர்கிறதா காடு
அதன் வருங்காலத்தைக் கணிப்பதற்கு
சுற்றத்தின் நடுவே வாழ அது முயல்வதும் இல்லை
தன் நிலை உயர்த்திக்கொள்ளச் சுரண்டுவதும் இல்லை
தன் அழிவை நினைத்துப் பதறுவதும் இல்லை

உணர்வில்லா இருப்பு
கருத்தற்ற காட்சி
தன் நலம் மட்டுமே அறிந்த
பரிதாப மனிதன்