Tuesday, January 19, 2016

உனக்கெது சொந்தம்

குட்டியாடு தப்பி வந்தா
குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ள நரி மாட்டி கிட்டா
கொறவனுக்குச் சொந்தம்
தட்டுகெட்ட மனிதர்கண்ணில்
பட்ட தெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்

உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா
கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
அதோடே சொந்தம் மாறுமடா கால 
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்ந்திடும் சொந்தமடா

No comments:

Post a Comment