Sunday, January 31, 2016

வெங்காயத் தமிழர்

பகுத்தறிவுப் பெரியவா - சமகாலக் குழப்பத்தின் முதலவா
உன் கருத்தைவிடத் தடியை விரும்பும் சிலர் மனம் உனக்குப் புரியுதா

எப்பவோ எவனோ எழுதிய வேதத்தைத் துருவித் துருவி
சிலரை வேசிமகன் என்றாய் - அந்தக் குப்பையை யார் படிச்சா முதல்ல
மறக்க வேண்டிய அவலத்தை மறுக்கா மறுக்கா வலியுறுத்தி
வெறுப்பினால் ஒர் இயக்கத்தை உருவாக்கினாய்
வேலியில் போற ஓணானை பிறர் வேட்டியில் விட்டாய்

பாமரனே ஆயினும் சிலரை விட உயர்த்தப்பட்டோர்
என்னும் தாழ்வு மனப்பான்மை விதைத்தாய் - விளைவு
நாயர் மேனன் ரெட்டி நாயுடு யதார்த்தமானார்கள்
தேவர் செட்டி பிள்ளை முதலியார் தனிக்கையானார்கள்

மனதிலிருக்கும் தாழ்மை நோய் துலக்க
பெயரை அழித்தால் பொருள் மாறுமோ
இருமனம் முடிக்கும்போதும் வீடு வாடகை விடும்போதும்
நீங்க என்ன ஆள்'னு கேக்கத்தானே செய்யறான்

இடஒதுக்கீட்டு ஆய்வு பலனற்றுத் தேங்கியுள்ளது
மேடைக் கூவல்களும் கலைமாமணி விருதற்றுப் போனது

நீ அவனைத் தொடக்கூடா தென்றால்
அவனும் உன்னைத் தொடக்கூடாது
பொதுவாப் பார்த்தால் இருவரும் தீண்டத்தகாதவர்களே

மனித நாகரீகம் தளிர இயற்கையாக நிகழும் சமூகப் பிரிவுகள்
எவனோ ஒருவன் திட்டமிட்டு செய்த சதியென
பூச்சாண்டி பிரச்சாரம் செய்வதை விட்டு விடுங்கள்

அவ்வாறு தோன்றிய இச்சாதியக் கட்டமைப்பு
காலமாற்றத்தில் அதுவாகவே மறைந்துவிடும்
அளவுக்கு அதிகமாகப் போற்றுவதும் தூற்றுவதும்
இயற்கைக்கு எதிரானவை
யதார்த்த அமைதியைக் குலைக்கும் நாசவேலை


No comments:

Post a Comment