காமம் போனாலும் மனதில் காதல் போவதில்லை
உணர்வு போனாலும் நினைவு போவதில்லை
தேவை போனாலும் ஆசை போவதில்லை
பேய்கள் போனாலும் பயம் போவதில்லை
அனுபவம் பல இருந்தும் அடிகள் பல விழுந்தும்
அறிவின் விளிம்புகூடத் தெரிவதில்லை
தீரா இன்பமும் சோகமும் கலந்த இவ்வாழ்வில்
பதில் பல வந்தும் புதிர் போவதில்லை
No comments:
Post a Comment