அமைதியாய் புவியாடும்
மெய்யோடும் உயிராடும்
தாகம் தணியும் தருவாயில்
சொர்கம் உணர்த்தும்
நன்றி இல்லா மனிதனுக்கு
நன்றி உணர்த்தும்
அமைதியாய் புவியாடும்
மெய்யோடும் உயிராடும்
தாகம் தணியும் தருவாயில்
சொர்கம் உணர்த்தும்
நன்றி இல்லா மனிதனுக்கு
நன்றி உணர்த்தும்
அம்மண மனிதரை குழிப்பாட்டும்
வெளிப்புறத்தை துப்பரவும்
உட்புறத்தை உசுப்பேத்தும்
அடக்கமாய் விளையாடும் மேற்பரப்பு
உள்ளே சீண்டப்பட்டால்
பேரிடர் விளைக்கும் பெண்ணான படைப்பு
உன்மேல் மிதிப்பதை கவனிக்கும் மனம்
உன்னைக் கவனித்தால்
வெறுமைச் சுழலில் துலையுமோ
விழிக்கும் போதையில் துயிலுமோ
அமைதியாய் புவியாடும்
என் மெய்யோடும் உயிராடும்
உன்னிடத்தில் பல பாடங்கள் படிக்க வேண்டும்
உன் சிற்றலைப் பரப்பில் மெய்யுணர வேண்டும்
No comments:
Post a Comment